ராஜிவ் கொலை குற்றவாளி சிவராசன் ஏன் சந்திரசாமியிடம் போனில் பேசினார்? அவிழாத மர்மம்!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தை தொடர்ந்து, தேடப்பட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிவராசன் (ஒற்றைக்கண் சிவராசன்), சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் பெங்களூருக்கு தப்பியோடினர்.
சிவராசன் தலைக்கு ரூ.10 லட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியாக நிர்ணயித்தது காவல்துறை. இந்த நிலையில், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்த, ரங்கநாத்தின் வீட்டுக்கு அவர்கள் தப்பியோடி சென்று மறைந்து வாழ்ந்தனர்.

இதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பெங்களூரின் கோனனேகுன்டேவில் உள்ள ஒரு வீட்டுக்கு ரங்கநாத் குடியேறினார். ஆனால் அதையும் கண்டுபிடித்த சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ஆகஸ்ட் 17ம் தேதி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் வீட்டுக்குள் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறினர். எனவே, சிவராசன் சயனைடு குப்பியைக் கடித்தபடியே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். உடனிருந்த சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தனர்.
இதையடுத்து, ரங்கநாத்திடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. பெங்களூர் எம்ஜி ரோட்டிலுள்ள, லாட்ஜுகளுக்கு செல்லும் சிவராசன், அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித்துவாரில் இருந்த சந்திராசாமிக்கு போனில் பேசுவார் என ரங்கநாத் தெரிவித்தார்.
அப்படி பேசும்போது, "கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத்துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்" என சிவராசன் பேசினார் என ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்ற போதிலும் ராஜிவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த மர்மங்கள் விசாரிக்கப்படவில்லை. இத்தகவலை வெளியிட்ட ரங்கநாத் காலமாகிவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications