ராஜிவ் கொலை குற்றவாளி சிவராசன் ஏன் சந்திரசாமியிடம் போனில் பேசினார்? அவிழாத மர்மம்!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தை தொடர்ந்து, தேடப்பட்டு வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிவராசன் (ஒற்றைக்கண் சிவராசன்), சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் பெங்களூருக்கு தப்பியோடினர்.
சிவராசன் தலைக்கு ரூ.10 லட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதியாக நிர்ணயித்தது காவல்துறை. இந்த நிலையில், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்த, ரங்கநாத்தின் வீட்டுக்கு அவர்கள் தப்பியோடி சென்று மறைந்து வாழ்ந்தனர்.

இதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பெங்களூரின் கோனனேகுன்டேவில் உள்ள ஒரு வீட்டுக்கு ரங்கநாத் குடியேறினார். ஆனால் அதையும் கண்டுபிடித்த சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ஆகஸ்ட் 17ம் தேதி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் வீட்டுக்குள் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறினர். எனவே, சிவராசன் சயனைடு குப்பியைக் கடித்தபடியே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். உடனிருந்த சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தனர்.
இதையடுத்து, ரங்கநாத்திடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. பெங்களூர் எம்ஜி ரோட்டிலுள்ள, லாட்ஜுகளுக்கு செல்லும் சிவராசன், அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித்துவாரில் இருந்த சந்திராசாமிக்கு போனில் பேசுவார் என ரங்கநாத் தெரிவித்தார்.
அப்படி பேசும்போது, "கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத்துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்" என சிவராசன் பேசினார் என ரங்கநாத் தெரிவித்துள்ளார்.
ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன என்ற போதிலும் ராஜிவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த மர்மங்கள் விசாரிக்கப்படவில்லை. இத்தகவலை வெளியிட்ட ரங்கநாத் காலமாகிவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications