தனியா நிற்கிறோமே, கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?: நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட ராமதாஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் தொகுதிகளில் பாமகவின் பலம், செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுகிறது. ஓராண்டுக்கு முன்பே பாமக தனது முதல்வர் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸை அறிவித்தது.

இந்நிலையில் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணியின் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வெள்ளை பேப்பர் அளிக்கப்பட்டது. நிர்வாகிகளின் தொகுதிகளில் பாமகவின் பலம், செல்வாக்கு எப்படி உள்ளது? தனித்து போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? உள்ளிட்ட தகவல்களை பேப்பரில் எழுதுமாறு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் கட்சியின் பலம், வெற்றி வாய்ப்பு குறித்து பேப்பரில் எழுதிக் கொடுத்தனர். அதன் பிறகு நடந்த பாமக ஒன்றிய நகர, பேரூர், பகுதி, மண்டல செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் அவர்களிடம் கட்சியின் பலம், செல்வாக்கு குறித்து எழுதி வாங்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications