கல்வெட்டில் எழுதிவைத்து பக்கத்துல உட்கார்ந்துக்கோங்க ஓபிஎஸ்: ராமதாஸின் நறுக் ட்வீட்டுகள்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாட்டு நடப்பு பற்றி ட்விட்டரில் சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க தவறுவது இல்லை. தமிழகம் மற்றும் நாட்டு நடப்பு குறித்து அவர் நச்சென்று கருத்து தெரிவித்து வருகிறார்.
ராமதாஸின் ட்வீட்டுகளில் சில உங்களுக்காக,
|
கடைசி இடம்
தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் கடைசி இடம்: இதில் ஆச்சரியப்பட என்னவிருக்கிறது... எப்போதும் கிடைக்கும் இடம் தானே?
|
மதுக்கடை
இராஜஸ்தானில் 94% எதிர்ப்பு வாக்குகளுடன் மதுக்கடைகளை மூடிய பெண்கள்: தமிழகத்தில் மதுக்கடையை மூட 100% பெண்களின் ஆதரவு கிடைக்கும்!
|
மல்லையா
ரூ.4000 கோடி கடனை திருப்பிச் செலுத்த மல்லையா முடிவு: கருவாடு மீனாகிறது... கறந்த பால் மடியேறுகிறது!
|
உண்மை தான்
அதிமுகவுக்கு உண்மையான மாற்று நாங்கள் தான்: கலைஞர் - உண்மை தான்... மக்களைக் கெடுத்து நாட்டை சீரழிப்பதில் அதிமுகவுக்கு மாற்று நீங்கள் தான்!
|
காமெடி
5 ஆண்டுகளில் 7485 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: நத்தம் விஸ்வநாதன்- கரண்ட் போன நேரத்துல நீங்க வேற காமெடி பண்ணாதீங்க!
blockquote class="twitter-tweet" data-lang="en"> இந்தியாவின் ஒப்பற்ற ஒரே தலைவர் அம்மாதான்:ஓ.பி.எஸ்- அப்படியா.தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிவைத்துவிட்டு பக்கத்துலஉட்கார்ந்து கொள்ளுங்கள்! — Dr S RAMADOSS (@drramadoss) March 29, 2016 |
கல்வெட்டு
இந்தியாவின் ஒப்பற்ற ஒரே தலைவர் அம்மாதான்:ஓ.பி.எஸ்- அப்படியா.தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுல எழுதிவைத்துவிட்டு பக்கத்துல உட்கார்ந்து கொள்ளுங்கள்!
|
மோடி
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம் நாட்டுக்கு பயணம்: செய்தி - உலகம் பிறந்தது அவருக்காக... ஓடும் நதிகளும் அவருக்காக!