“தோசையை மாற்றிப் போட்டாலும்” கொள்கை அளவில் ஒற்றுமையாக இருக்கும் திமுக, அதிமுக- ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மக்கள் தோசையை மாற்றிப் போட்டு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் மக்களைச் சுரண்டும் கொள்கைகளில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 28 ஆவணங்களை வெளியிட்டு உள்ளோம். இதுவரை 15 வரைவு பட்ஜெட்டுகளை வெளியிட்டுள்ளோம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிட்டு வருகிறோம்.

Ramadoss says both parties same in Political policies

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்காக போராடி வருகிறேன். போராட்டக்காரன், போராளி என்று அழைப்பதே எனக்கு பிடிக்கும். பா.ம.க முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி, தன்னுடன் நேருக்குநேர் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தும் எந்தக்கட்சியும் வரவில்லை. அன்புமணியிடம் திறமை உள்ளது. அவருடன் விவாதிக்க யாருக்கும் திறமை இல்லை.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் செய்வது, இலவசங்களை கொடுப்பது, மதுவை கொடுப்பது போன்ற கொள்கைகளில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். தோசையை மாற்றி போடுவது போல 5 முறை கருணாநிதிக்கும், 3 முறை எம்.ஜி.ஆர், 3 முறை ஜெயலலிதா என 2 கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு அளித்தீர்கள். ஆனால், அவர்கள் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்கிறார்கள். இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. கல்விக்கூடங்களை தனியார் நடத்துகிறார்கள். டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வருகிறது" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+