'அவர்' பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே முன்னேற்ற ஒன்னும் செய்யவில்லை: ராமதாஸ்
திருவாரூர்: 5 முறை முதல்வராக இருந்தும் கருணாநிதி அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பாமக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

5 முறை முதல்வராக இருந்தும் கருணாநிதி அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தையே பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்யவில்லை. இன்னும் சில அரசியல் தலைவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்கள். அவர்களும் அவர்களின் மாவட்டம் முன்னேற ஒன்றும் செய்யவில்லை.
மூன்று போகம் நெல் சாகுபடி நடந்த டெல்டா மாவட்டங்களில் தற்போது ஒரு போகம் கூட நடக்கவில்லை. இதற்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம். இரண்டு திராவிடக் கட்சிகளும் இலவசங்களை அளித்து மக்களை ஏமாற்றுகின்றன.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி பாமகவின் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டன என்றார்.












Click it and Unblock the Notifications