அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தில் பங்கு கேட்பாரா தமிழக முதல்வர்? என்ன சொல்கிறார் ராமதாஸ்?
தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை அதிகாரிகள் பதுக்கிக்கொள்வார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆந்திராவில் முதல்வருக்கு பயந்து அதிகாரிகள் வாங்கிய லஞ்சத்தை திருப்பி தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை பதுக்கிக்கொள்வார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், அதிக லஞ்சம் புரளும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தையும், ஆந்திரா 2வது இடத்தையும் பிடித்தது. இந்த அவப்பெயரை போக்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, புகார் எண் 1100யை அறிவித்தது.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் இதில் புகார் தரலாம். புகார் உண்மையாக இருந்தால், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரே பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு நேரடியாக வந்து பணத்தை தருவதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சமே.

லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை
அதாவது, லஞ்சப்புகாருக்கு உள்ளான ஊழியர் கடும் நடவடிக்கையில் இருந்து தப்ப, தான் வாங்கிய லஞ்சப்பணத்தை உரியவரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

நல்ல வரவேற்பு
இதற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு நடவடிக்கைக்கு பயந்து அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.
|
திருப்பி தருகிறார்கள்
இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஆந்திராவில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை அதிகாரிகள் திருப்பித்தருகின்றனர்.

பதுக்கி கொள்வார்கள்
தமிழகத்தில் முதல்வருக்கு பயந்து வாங்கிய லஞ்சத்தை பதுக்கிக்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பங்கு கேட்பார் என பயந்து அதிகாரிகள் பதுக்கி கொள்வார்கள் என்பதை போல் உள்ளது அவரது கருத்து. ராமதாஸின் இந்தக் கருத்தை 200க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications