கர்நாடக தேர்தல் முடியப் போகுது.. மொத்தமாக பெட்ரோல் விலை ஏறப் போகுது.. ராமதாஸ் வார்னிங்!
கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை ஏற்றப்படலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை ஏற்றப்படலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இங்கு கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மேலும் கூறுகையில், ஒரு பொதுநல அறிவிப்பு. இன்று மாலை கர்நாடகத் தேர்தல் முடிவடைந்து விடும்.
கடந்த 3 வாரமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலைகள் நாளை காலை மொத்தமாக உயர்த்தப்படலாம். விலை உயர்விலிருந்து தப்ப இன்றே எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுநல அறிவிப்பு. இன்று மாலை கர்நாடகத் தேர்தல் முடிவடைந்து விடும். கடந்த 3 வாரமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலைகள் நாளை காலை மொத்தமாக உயர்த்தப்படலாம். விலை உயர்விலிருந்து தப்ப இன்றே எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) May 12, 2018