புத்தாண்டிற்காக ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது: ராம.கோபாலன் கண்டனம்
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு வழிபாட்டுக்காக ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறக்கக் கூடாது என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வலியுறுத்தியுள்ளார். மீறித்திறந்தால், அதனை எதிர்த்து இந்து முன்னணி ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு முடிவடைந்து நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதனையொட்டி நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், அவ்வாறு நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது என என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆடைக் கட்டுப்பாடு...
ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாட்டை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பொது இடங்களில் நாகரிகமாக உடை அணிவது பண்பாடு. ஆடைக்கட்டுப்பாட்டை அறநிலையத்துறை முழுமையாக நிறைவேற்ற, மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆகம விதிகளுக்கு புறம்பானது...
ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப்புத்தாண்டில் நள்ளிரவில் ஆலயங்களை வழிபாட்டிற்கு திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பானது. தனியார், அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களையும் நள்ளிரவில் திறக்கக்கூடாது என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கண்டனம்...
மார்கழி என்பதால் விடியற்காலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்படும். அப்போது குடும்பத்தோடு வந்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து நள்ளிரவில் கோவில் திறப்பது என்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆர்ப்பாட்டம்...
மீறித்திறந்தால் இந்து முன்னணி ஜனநாயக வழியில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜனவரி 1-ந் தேதி நள்ளிரவில் இளைஞர்களும், இளம்பெண்களும் வீதியில் உலாவுவதை காவல்துறை தடுக்க வேண்டும்.
கைது செய்ய வேண்டும்...
குடித்துவிட்டு கும்மாளமிடுவதையும், வாகனம் ஓட்டுவதையும், பைக் ரேஸ் போன்ற ஆபத்தான விஷயங்கள் நடத்துவதும் சட்டவிரோதம் என எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும். மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications