டை கட்டுவது எப்படி? புதிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பழைய மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் புதிதாக 2017-18 ம் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு டை கட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு சகோதர பாசத்துடன் டை கட்டடும் முறை குறித்து விளக்கி கூறினர்.

புதிய மாணவர்கள் தாமாகவே டை கட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு ஆசிரியர்கள் கீதா மற்றும் வளர்மதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications