தவிட்டுக்கு ஆசைப்படும் குருட்டு கோழி விஜயகாந்த்: ராமராஜன் தாக்கு!
சென்னை: குருட்டு கோழி தவிட்டுக்கு ஆசைப்பட்டதைப் போல முதல்வர் பதவிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆசைப்படுவதாக அதிமுக பேச்சாளரும், நடிகருமான ராமராஜன் விமர்சித்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் நடிகர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நட்சத்திர பேச்சாளரான நடிகர் ராமராஜன் ராயப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ‘தி.மு.க., ஆட்சியில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதில், பூச்சியும், புழுக்களும் தான் இருந்தன. லாரி லாரியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டது' எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசுகையில். 'குருட்டு கோழி தவிட்டுக்கு ஆசைப்பட்டதை போல' விஜயகாந்த முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்' என ராமராஜன் விமர்சித்தார்.