தக தக அக்னியை அணைத்த கனமழை.. ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பின்னிபெடலெடுக்கும் மழை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் ராமேஸ்வரம், தனுஷ்க்கோடி, பாம்பன் மண்டபம், திருப்புலாணி மற்றும் திணைக்குளம் பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கத்தரி வெயில் படுமோசமாக மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை பெய்த மழையினால் விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

குமரி கடல், லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications