ராம்குமார் தற்கொலை செய்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மட்டும் ரிப்பேர் ஆனது எப்படி?
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த ஜுன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார் மென் பொருள் பொறியாளர் சுவாதி. பின்னர் இந்த வழக்குத் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று முன்தினம் சிறைவளாகத்திலேயே மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மர்மங்கள்...
சிறைக்குள் கைதி ஒருவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல்முறை. அதோடு, ஏற்கனவே மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கில் தற்போது ராம்குமாரின் மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

சிசிடிவி கேமரா ரிப்பேர்...
இந்நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை, இதனால் அவர் தற்கொலை செய்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது மேலும் மர்மத்தை அதிகரித்துள்ளது.

கண்காணிப்பு...
பொதுவாக புழல் சிறையில் உள்ள அனைத்து அறைகளும் கைதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு, சிசிடிவி கேமராவின் கண்காணிப்பில் இருக்கும். அப்படி இருக்கையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மட்டும் எப்படி பழுதானது.

சந்தேகம்...
அப்படியே பழுதடைந்தாலும், அது ஏன் சரி செய்யப்படவில்லை?.. அல்லது இதில் ஏதாவது காரணங்கள் ஒளிந்துள்ளனவா? என பல்வேறு சந்தேகங்கள் முளைத்துள்ளன.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications