ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும்.
இந்நிலையில் வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக நேற்று வடகாடு மீன் பிடி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அப் பெண் வீடு திரும்பாததால் கணவன் சந்தேகத்தின்பேரில் தேடி சென்ற போது, இறால் பண்ணை அருகே அரைகுறை ஆடையில் எரிந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்கள் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இறால் பண்ணைக்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 6 வடமாநில இளைஞர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications