ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும்.
இந்நிலையில் வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக நேற்று வடகாடு மீன் பிடி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அப் பெண் வீடு திரும்பாததால் கணவன் சந்தேகத்தின்பேரில் தேடி சென்ற போது, இறால் பண்ணை அருகே அரைகுறை ஆடையில் எரிந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்கள் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இறால் பண்ணைக்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 6 வடமாநில இளைஞர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications