ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக "முதல் விக்கெட்"... வட சென்னை மா.செ. ராயபுரம் மனோ ராஜினாமா!
சென்னை: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராயபுரம் மனோ. தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ராயபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார் ஆர்.மனோ என்கிற மனோகர். இவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர் ஆவார்

சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ராயபுரத்தில் படுதோல்வியடைந்தார் மனோ.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைவர் பதவியில் இளங்கோவன் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ நேற்று தெரிவித்தார். ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு இளங்கோவனிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இளங்கோவனின் ராஜினாமாவை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதாகவும், புதிய தலைவர் யார் என்பதை வெளிநாடு சென்றுள்ள ராகுல்காந்தி நாடு திரும்பிய பின்னர் அறிவிப்பார் என்றும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வடசென்னை மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராயபுரம் மனோ. தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications