20 தொகுதிகளின் வாக்காளர்களே.. நீங்க ரெடியா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியாக உள்ள திருவாரூர் உள்ளிட்ட 20 சட்டசபைத் தொகுதிகள் தற்போது தமிழகத்தில் காலியாகியுள்ளன.
இந்தத் தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
அது இருக்கட்டும்.
இந்த 20 தொகுதிகளில் வசிக்கும் அல்லது அந்த தொகுதிகளைச் சேர்ந்த நமது வாசகர்களா நீங்கள்.. அப்படியானால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
உங்களது எம்எல்ஏவின் செயல்பாடு எப்படி இருந்தது
உங்களது தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினை ஏதேனும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதா
உங்களது தொகுதியில் சிறப்பாக செயல்படும் கட்சி எது
உங்களது தொகுதியின் மிகப் பெரிய பிரச்சினையாக எது உள்ளது
இதுபோல உங்களது தொகுதி குறித்த உங்களது கருத்துக்களை, கோரிக்கைகளை, குமுறல்களை, பாராட்டுக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல், பிரச்சினைகளைத் தீர்க்க என்ன வழி என்ற ஆலோசனைகளையும், தீர்வுகளையும் கூட நீங்கள் எங்களிடம் சொல்லலாம்.
ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் (மட்டும்) வரவேற்கப்படுகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் புனை பெயரிலும் அனுப்பலாம். ஆனால் தொகுதி, ஊர் பெயர் முக்கியம்.
அனுப்ப வேண்டிய முகவரி: