மானாமதுரை அருகே வீடுகளை இழந்த தலித்களுக்கு நிவாரணம்: எஸ்சி, எஸ்டி கமிஷன் உத்தரவு
பாப்பங்குளம்: கிராமத்தில் வீடுகளை இழந்த தலித்களுக்கு அதே இடத்தில் புதிய வீடு கட்டித்தருவதோடு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று ஆய்வு செய்த மத்திய எஸ்சி/எஸ்டி கமிசன் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி தலித் மக்களின் வீடுகளை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக இடித்து தள்ளினார்.

இது தொடர்பாக தேசிய எஸ்சி/எஸ்டி கமிசன் உறுப்பினர் சிவண்ணா தலைமையில் இணை செயலாளர் சீத்தன், சென்னை எஸ்சி/எஸ்டி கமிசன் இயக்குனர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதுவரை அரசு சார்பில் செய்யப்பட்ட உதவிகள் என்ன என்று கலெக்டர் ராஜாராமன், எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவண்ணா கூறியதாவது:
சின்ன சிறிய கிராமம் இது, இதில் ஆக்ரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடித்துள்ளனர். வீடுகள் இடிக்கப்பட்ட போது பணியில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் டிஎஸ்பி (வெள்ளதுரை) யோ அல்லது போலீசாரோ யார் இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், சாதாரணமாக ஒரு லட்சம் , இரண்டு லட்சம் கொடுக்க கூடாது , சேத மதிப்பீட்டின் படி நிவாரணம் வழங்க வேண்டும், புதிய வீடுகள் அதே இடத்தில் கட்டி தரவேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும், எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது , மகளிர் குழு மூலம் கறவை மாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நிலம் இல்லாத எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இலவசமாக 2ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் உள்ளது அதன்படி வழங்க வேண்டும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications