ஆந்திரா டூ கோடியக்கரை, அங்கிருந்து இலங்கை...சீன மாபிஃயாவின் செம்மர கடத்தல் ரூட்!
சென்னை: செம்மர கடத்தல் பின்னணியில் சீன நாட்டு மாஃபியா உள்ளதாக கூறுகின்றனர் இந்திய உளவு அமைப்பினர்.
சீனாவை சேர்ந்த மாஃபியாக்கள், செம்மரங்களை வெட்டி எடுத்து, அதை கோடியக்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தெரியவந்துள்ளது.
பெரிய துறைமுகங்களில் இருந்து கடத்தினால் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தால், கோடியக்கரையை தேர்ந்தெடுத்துள்ளன சீன மாஃபியா கும்பல்கள்.

இலங்கை செல்லும் செம்மர துண்டுகள், அங்கிருந்து சீனா, ஜப்பான் மற்றும் பல கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக உளவுத்துறை கூறுகிறது.
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், செம்மரங்கள், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் மூலப்பொருளை கொண்டிருப்பதாக உலகளவில் நம்பிக்கையுள்ளது. இதுவும் கடத்தலுக்கு முக்கிய காணம். ஒரு டன் செம்மர கட்டை ரூ.10 லட்சம் வரை விலைபோகிறதாம்.
சீனாவை சேர்ந்த மாஃபியாக்கள் எப்போதாவது ஒருமுறை இந்தியா வந்து பிறகு திரும்புவதில்லை என்பதால் அவர்களை அமுக்கி பிடிப்பது கஷ்டமாக உள்ளது.
2013ம் ஆண்டில், டெல்லி ஏர்போர்ட்டில் மட்டும் 18 ஆயிரம் கிலோ செம்மரங்கள் மீட்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இதுவரை மொத்தம் 30 ஆயிரம் கிலோ செம்மரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதான அனைவருமே சீனர்கள். இதுவரை 35 சீனர்கள் கைதாகியுள்ளனர்.
நம் நாட்டில், செம்மரம் பொதுவாக ஆந்திராவின் தெற்கு பகுதியான திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மட்டுமே அதிகம் கிடைப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications