Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோகனாம்பாள் கூட்டாளி வீட்டில் 17 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கல்- கார் பறிமுதல்!

Subscribe to Oneindia Tamil

Red sanders, car seized from house
வேலூர்: செம்மரக்கடத்தல் வழக்கில் கரகாட்டக்கலைஞர் மோகனாம்பாளின் கூட்டாளியும் திமுக பிரமுகருமான பாபுவின் வீட்டில் பாதுக்கிவைக்கப்பட்டிருந்த 17 கிலோ செம்மரக்கட்டைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

காட்பாடி தாராபடவேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் (வயது 55) என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த மோகனாம்பாளிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தனது அக்கா நிர்மலாவின் மகன் சரவணனுக்கு செம்மரக் கடத்தலில் ஏராளமான பணம் கிடைத்தது. அந்த பணத்தில் வட்டி தொழிலில் ஈடுபட்டேன். செம்மரக் கடத்தல் சம்பவத்தில் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பாபு முக்கிய புள்ளி என தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, கைதாகி இருந்த பாபுவை காட்பாடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

செம்மரக் கடத்தல் தொடர்பாக பாபு கூறிய தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:

22 ஆண்டுகளாக மரம் கடத்தல்

கடந்த 1992-ம் ஆண்டு முதல் சந்தனமரக் கடத்தலில் பாபு ஈடுபட்டுள்ளார். இவர் மீது ஒடுகத்தூர் வனத்துறையால் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா காடுகளில்

ஜமனாமரத்தூர் வனப்பகுதியில் சந்தனமரம் முழுவதும் காலியானதால் செம்மரம் வெட்டும் தொழிலை ஆரம்பித்துள்ளார். இதில் ஏராளமான பணம் கிடைத்ததால் ஜவ்வாதுமலை கிராமங்களில் இருந்து இளைஞர்களை திரட்டி ஆந்திர மாநிலத்திற்கு செம்மரங்கள் வெட்ட அனுப்பியுள்ளார்.

கோடிக்கணக்கில் பணம்

செம்மரக் கடத்தலில் கோடிகளில் பணம் புரண்டதால் அணைக்கட்டு பகுதியில் இருந்து தனது இருப்பிடத்தை காட்பாடிக்கு மாற்றிக்கொண்டார். அங்கு ரூ.1 கோடி மதிப்பில் பங்களா கட்டினார். மேலும், ஊருக்கு வந்து சென்றால் தங்குவதற்கு வசதியாக அங்கும் ரூ.30 லட்சத்தில் சகல வசதிகளுடன் வீடு கட்டினார்.

சரவணனுடன் கூட்டு

தொழில் கூட்டாளியான போண்டா வெங்கடேசனுக்கு மோகனாம்பாளின் அக்கா மகன் சரவணனின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போண்டா வெங்கடேசனின் மொத்த தொழிலையும் சரவணன் கவனித்துக் கொண்டார். இதனால், பாபுவுடனும் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சரவணன் செம்மரக் கடத்தல் தொழிலில் தனியாக ஈடுபட்டுள்ளார்.

செம்மரங்கள் பதுக்கல்

மேலும், அணைக்கட்டு அடுத்த கீழ்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 30) என்பவர் மூலம் செம்மரக் கடத்தலை பாபு செய்து வந்துள்ளார். ஓட்டேரி குடோன் தெருவில் ரூ.1 கோடி மதிப்பில் வீடு ஒன்றை கட்டிவருவதாகவும் அங்கு செம்மரங்கள் பதுக்குவது வழக்கம் என்றும் கூறினார்.

கார், செம்மரக்கட்டை பறிமுதல்

இதையடுத்து அந்த வீட்டில் டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சாக்கு மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான 17 கிலோ செம்மரக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மீண்டும் சிறையில்...

போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று மீண்டும் காட்பாடி நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் பாபு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சரவணனுக்கு கஸ்டடி

இந்த வழக்கில் சரணடைந்த சரவணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக வருகிற 23-ந் தேதி காட்பாடி நீதிமன்றத்தில் சரவணன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்

அப்போது சரவணனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காட்பாடி போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+