எப்படி வேணா போட்டோ எடுங்க... தெனாவெட்டாக போஸ் கொடுத்த செம்மரக்கடத்தல் டி.எஸ்.பி. தங்கவேலு!
வேலுார்: செம்மரக் கடத்தலில் சிக்கிய டி.எஸ்.பி., தங்கவேலுவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, ஆம்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட டி.எஸ்.பி தங்கவேலு அதே அதிகார தோரணையோடு நடந்து கொண்டார். தன்னை புகைப்படம் எடுக்க முற்றுகையிட்ட செய்தியாளர்களிடம் ஆவேசத்தோடு பேசியதோடு எப்படிவேண்டுமானாலும் போட்டோ எடுங்க என்று கோபத்தோடு கூறினார்.
போலீஸ் விசாரணையில் செம்மரக் கடத்தலின் பின்னால் உள்ள பெரும்புள்ளிகள் குறித்த தகவல்களை தங்கவேலு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஆம்பூரை அடுத்த மாதனூர், பாலூரை சேர்ந்தவர் சின்னபையன், பா.ம.க. பிரமுகரான இவர் செம்மர கடத்தல் தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னபையனின் கொலை பின்னணியில் வேலூர் கலால்துறை டி.எஸ்.பி. தங்கவேலு இருப்பதும், அவருக்கு செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காட்பாடி அருகே ஆம்பூர் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து வேலூர் மத்திய சிறையில் டி.எஸ்.பி. தங்கவேலு அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது செம்மர கடத்தலில் 4 முக்கிய பிரமுகர்கள், 5 அரசியல் பிரமுகர்கள், 11 போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும் கூறியதின் அடிப்படையில் சின்னபையனின் கோழிப்பண்ணையில் இருந்து டி.எஸ்.பி. செம்மரங்களை கடத்தியதும் அதுவே சின்னபையனின் கொலைக்கு காரணமானதும் தெரியவந்தது.
இந்தநிலையில் சிறையில் இருந்து டி.எஸ்.பி. தங்கவேலுவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்த போலீசார் அவரை வேனில் ஏற்றினர். அப்போது அவர் செய்தியாளர்கள் போட்டோகிராபர்களை பார்த்து, தன்னை பற்றி தவறாக செய்தி வருவதாக கூறி ஆவேசமடைந்தார். என்னை எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

குறையாத தோரணை
டி.எஸ்.பி., தங்கவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது அதே அதிகார தோரணையோடு சென்றார். போலீசாருடன் சிரித்து பேசியபடி சென்ற காட்சியையும், அவர் பின்னால், போலீசார், 'சென்ற காட்சியையும் பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டும் டி.எஸ்.பி., தோரணையிலேயே நடந்துக்கிறாரே?' என, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் காவலுக்கு எதிர்ப்பு
ஆம்பூருக்கு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தராஜன் முன்பு தங்கவேலு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டி.எஸ்.பி. தங்கவேலு சார்பாக மதுரையை சேர்ந்த வக்கீல்கள் ஆனந்தன், குணசேகரன், அரிமுத்து ஆகியோர் ஆஜராகி டி.எஸ்.பி.யை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். டி.எஸ்.பி. தங்கவேலுவை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்று 1 மணிநேரம் வாதாடிய வக்கீல்கள் டி.எஸ்.பி.யை ஜாமீனில் விடக்கோரி மனு கொடுத்தனர்.

2 நாள் போலீஸ் காவல்
இந்த நிலையில் பிற்பகலில் டி.எஸ்.பி.யை போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது டி.எஸ்.பி.யை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தும் வருகிற 18ம் தேதி மதியம் 2.15 மணிக்கு டி.எஸ்.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி நீதிபதி ஆனந்தராஜன் உத்தரவிட்டார். டி.எஸ்.பி.யை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 18ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

சிக்கலில் யார் யார்
இரண்டு நாள் போலீஸ் விசாரணையில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்களை, டி.எஸ்.பி., தங்வேலு வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications