குளிர்ந்தது சென்னை புறநகர்! வெப்ப சலனத்தால் இன்றும் மழை நீடிக்கும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்த. புறநகர் பகுதிகளான தாம்பரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
இதனால் வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்கள் சற்றே குளிர்ந்த காற்றில் இளைப்பாறினர்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் அதிகபட்சமாக 91 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக79 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications