போயஸைத் தாக்கிய தீபா புயல்.. செய்தியாளர்களிடம் கெடுபிடி காட்டிய போலீஸ்!
போயஸ் கார்டனுக்குள் ஜெ.தீபா சென்றுள்ளதால் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
சென்னை: போயல் கார்டனுக்குள் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர்.

இந்நிலையில் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த போயஸ் கார்டன் தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.

மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உள்ளே சென்று உட்கார்ந்துள்ளார். அடுத்த நடவடிக்கை குறித்து தெரியவில்லை. அங்கு தீபாவின் கணவர் மாதவனும் வந்துள்ளார்.
இதனிடையே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும், போட்டோகிராபர்களையும் உள்ளே விடாமல் போலீஸார் அவர்களை தள்ளிவிட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாருக்கு எதிராக செய்தியாளர்கள் கண்டனம் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications