நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்கு.. அனுமதி தர உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை!
நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்குதொடர அனுமதி தர உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நீட் மரணத்தை தடுக்கத் தவறிய அரசு மீது அவமதிப்பு வழக்குதொடர அனுமதி தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து நேற்று திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முறையீடு
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நீட் மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

அரசு மீது புகார்
அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் மரணத்தை தடுத்திருக்க முடியும் என்ற அவர், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நீட் மரணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறினார்.

அனுமதி தர கோரிக்கை
நீட் மரணத்தை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

12ஆம் தேதி விசாரணை
இதையடுத்து அவரது முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வரும் 12ஆம் தேதி சூரியபிரகாசத்தின் மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications