எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கிய ஹெலிகாப்டர்.. குரங்கணி மீட்புப்பணியில் தாமதம்
தேனி குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கி இருக்கிறது.
Recommended Video
தேனி : தேனி குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கி இருக்கிறது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்தவிபத்தில் இது வரை 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 27 பேர் இதுவரை மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
எத்தனை
தற்போது 4 ஹெலிகாப்டர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று இரண்டு ஹெலிகாப்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்னும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இரவில் இல்லை
நேற்று இரவில் இந்த மீட்பு பணிகள் எதுவும் செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டது. போதுமான தொழில்நுட்பங்கள் அதற்காக இல்லை என்று மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியது.
நிறுத்தினார்கள்
இந்த நிலையில் இன்று மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்கள் எரிபொருள் இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டது. பாதி வழியில் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
|
மோசம்
இதனால் மீட்பு பணியில் பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கோபமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மிகவும் மோசமாக மீட்பு பணிகள் நடக்கிறது என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.