ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது, இது எங்களுடைய பணம்தான் என்று... இன்னும் என்ன சந்தேகம்?
சென்னை : திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது என்றும், அதனை விசாகப்பட்டினத்துக்கு எஸ்பிஐ கொண்டு சென்ற போது பிடிபட்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 15ம் தேதி திருப்பூரில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்திய போது 3 கண்டெய்னர் லாரிகளில் மரப் பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூரில் ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ரூ.570 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது. ரிசர்வ் வங்கிக்காக விசாகப்பட்டினத்துக்கு ஸ்டேட் வங்கிப் பணத்தை எடுத்துச் செல்லும் போது திருப்பூரில் பணம் பிடிபட்டது என்று வாதிட்டார்.
மேலும், ரூ.570 கோடி பணம் அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்தை பரிமாற்றம் செய்ய ஏப்ரல் 18ம் தேதியே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற பெருந்தொகை பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையே இப்படி பெரிய தொகை பரிமாற்றம் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதற்குள் இந்த கண்டெய்னர்களில் ரூ 5000 கோடி இருந்தது என்றும், ஏற்கெனவே ஏழு கண்டெய்னர்களில் பெரும் பணம் போய்ச் சேர்ந்துவிட்டதென்றும் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிவிட்டார்கள்.
இன்னும் சிலர் இந்தப் பணத்தை மத்திய அமைச்சர் ஒருவருக்கு போகிறதென்றும், தங்கள் பணம் என வங்கிகளைச் சொல்ல வைக்க கமிஷன் வேறு தரப்பட்டதாகவும் பகீர் கற்பனைகளை வெளியிட, அவற்றையெல்லாம் நம்பி அரசியல் தலைவர்களும் விதவிதமாக அறிக்கை விட்டதுதான் பரிதாபம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications