500, 1000 பிரச்சினை... கோயம்பேட்டில் 75% விற்பனை பாதிப்பு... வியாபாரிகள் கவலை!
ூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 75 சதவீதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரி
சென்னை: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தம் அடைந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 75 சதவீதம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் சில்லறைப் பிரச்சினை பூதாகரமாக உருவானது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல் போனதால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான கடைக்காரர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதை தவிர்த்தனர். வங்கிகளும், ஏ.டி.எம். மையங்களும் செயல்படாத நிலையில் கையில் இருப்பு உள்ள பணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை மந்தமாக இருந்தது. சில்லறைப் பிரச்சினையால் பொருட்கள் வாங்க வந்த பலர் வெறுங்கையுடன் திரும்பினர்.
சிலர் வேறு வழியின்றி தேவைக்கும் அதிகமாக 500 ரூபாய்க்கும் ஒரே கடையில் காய்கறிகள் மற்றும் பழம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஆனபோதும், வழக்கத்தைவிட நேற்று முன் தினம் இரவும், நேற்றும் வியாபாரம் மந்தமாகவே இருந்ததாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 சதவீதம் விற்பனைக் குறைந்துள்ளதாக அவர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. வியாபாரம் மந்தமாக இருந்ததால் பலர் கடைகளை அடைத்து விட்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications