சென்னை மக்களுக்கு உதவ குழுவை அனுப்பிய ரியாத் தமிழ் சங்கம்
ரியாத்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த 12 ஆண்டுகளாக 7 ஆயிரத்து 500 முகநூல் உறுப்பினர்களையும், 1,500 மின்னஞ்சல் உறுப்பினர்களையும் உள்ளடக்கி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் செயல்பட்டு வருகின்றது.

சாதி, மத பேதமின்றி தமிழால் இணைந்து சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு கலை நிகழ்ச்சிகள், சமூக சேவைகள், கல்விக்கூடங்கள், எழுத்துக்கூடங்கள், பயிற்சிபட்டறைகள் போன்றவைகளை நடத்தி வருகிறது. சவுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொலைக்காட்சியில் பார்த்த ரியாத் வாழ் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை விட்டும் எத்தனையோ கஷ்டங்களுக்கிடையே திரைகடலோடி திரவியம் தேடவந்த இம்மண்ணில் தன் சகோதர சகோதரிகளுக்கு ஒரு துயர் என்று அறிந்தவுடன் அவர்களால் இயன்ற தொகையை ரியாத் தமிழ்ச் சங்கத்திடம் கொடுத்தனர். அந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக திரு. ஜமால்சேட் அவர்கள் தலைமையில் ஒரு குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 25 தன்னார்வலர்களுடன் சென்னையில் வியாசர்பாடி, புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, காரனோடை, தாம்பரம் பெரியார்நகர், சோழாவரம், பெரம்பூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான போர்வை, பாய், சேலை, லுங்கி, அரிசி, பெண்களுக்கான நாப்கின்ஸ் போன்ற அத்தியாவசிய தேவைகளையும், மற்றும் சில இடங்களில் சென்று அவர்களின் அப்போதைய தேவையை அறிந்து இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

இது தவிர்த்து மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவு பணியையும் செய்து வருவதோடு சென்னை மற்றும் கடலூரில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
தன் சகோதர, சகோதரிகளின் துயர்துடைக்க தங்களால் ஒரு சிறிய அளவிலாவது உதவ முடிந்ததே என்ற மகிழ்ச்சியில் பெருமிதமடைந்து நிற்கின்றார்கள் ரியாத் வாழ் தமிழர்கள்.
-
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications