ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்பமனு வாங்கிய சிம்லா முத்துச்சோழன் - வாய்ப்பு கிடைக்குமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர். முதல்மனுவை கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் பெற்றார்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். திமுகவில் நேர்காணல் மூலம் வேட்பாளர் தேர்வு நடைபெற உள்ளதால் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. முதல்மனுவை கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் பெற்றார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானது. இந்த தொகுதியில் ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக அறிவிப்பு
ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் வருகிற 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12ஆம் தேதி மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பமனு
வேட்பாளர் நேர்காணல் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம். தலைமைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவத்தை ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

சிம்லா முத்துச்சோழன்
இதன்படி இன்று காலை முதல் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 1000 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். விண்ணப்ப மனுக்களை அறிவாலய அலுவலக மேலாளர் ஜெயக்குமார் விநியோகித்தார்.ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மகளிர் அணி பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்து சோழன் முதலில் விருப்ப மனுவை வாங்கி சென்றார்.

வெற்றி பெறுவேன்
செய்தியாளர்களிடம் பேசிய சிம்லா முத்துச்சோழன் , கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார். விருப்பமனுக்களை அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளரை ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications