ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கடத்தியதாக ஆவடி குமார் சிறைபிடிப்பு
ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அ.தி.மு.க நிர்வாகி ஆவடி குமார் சிறைபிடிக்கப்பட்டார்.
சென்னை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக காரில் பணம் கடத்தியதாக அ.தி.மு.க நிர்வாகி ஆவடி குமாரை பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் .
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் தொகுதியில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பறக்கும் படை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் என பலத்த சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை ஆர்.கே நகர் தொகுதியில் அ.தி.மு.க கட்சியின் தலைமை கழக பேச்சாளரான ஆவடி குமார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய தனது காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கடத்தியதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, அவரது காரை தேர்தல் அதிகாரி குமார் சோதனையிட்டு, ஆவடி குமாரிடம் விசாரணை நடத்திவருகிறார். இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் சூழ்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆவடி குமார் பேசும்போது, டி.டி.வி தினகரன் தரப்பு வேண்டுமென்றே தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும், பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications