ஆர்கே நகர் பணப்பட்டுவாடா புகார்... தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகாரின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணம் விநியோகம் செய்வதாக தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் அணி, நாம் தமிழர் கட்சி, பாஜக என 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் இந்த தொகுதியில் பணமழை பெய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பணப்புகார் தொடர்பாக தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவுடன் அனைத்து கட்சியினர் ஆலோசனை செய்தனர்.
அப்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கட்சியினர் மீது பணப்புகார் கூறினர். நேற்று ஒரே நாளில் ரூ. 100 கோடி பணம் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தினகரன் அணியினரும் வீடு வீடாக சென்று குக்கரையும், பணத்தையும் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தினகரன் ஆதரவாளர் செல்வி என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் புகார் தொடர்பாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் 11 வழக்குகளின் கீழ் தினகரன் ஆதரவாளர்கள் 55 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications