இடைத் தேர்தலில் முதல்முறையாக சுயேச்சை வெற்றி.. தினகரன் சாதனை
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதல் சுற்றில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனை படைத்துவிட்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

பணப்புகாருக்கும் பஞ்சமில்லாத நிலையில் இதன் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் இன்று நடைபெற்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஆர்கே நகருக்கு மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ள நிலையில் ஒரு தபால் வாக்கு மட்டுமே பதிவானது. அதில் திமுகவே வெற்றி பெற்றது.
வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் அதிமுக 48306 வாக்குகளும், திமுக 24624 வாக்குகளும், தினகரன் 89013 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தினகரன் வெற்றி பெற்றுவிடுவார்.
கலைகோட்டுதயம் 3645 வாக்குகளையும் பாஜகவின் கரு நாகராஜன் 1236 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்.
இதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை என்ற சாதனையை அவர் படைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications