ஆர்.கே. நகரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40,000 வரை வாரி இறைக்கும் கட்சிகள்! ரத்தாகிறது தேர்தல்?
பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதை உணர்ந்துதான், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயரை நியமித்தது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கிறார்களாம். காரணம், இடைத் தேர்தல்.
ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

இதனிடையே ஆர்.கே.நகரில் சில வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராய் செலவிட்டு வருகிறார்கள். கடந்த கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட ஆர்.கே. தொகுதியில் மீண்டும் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளது.
பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதை உணர்ந்துதான், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயரை நியமித்தது.
கடந்த முறை இவர்தான் பணப்பட்டுவாடாவை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியவில்லை என அறிக்கை அனுப்பினார். இதனால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாலும், இம்முறையும் பணப்பட்டுவாடா ஜரூராக நடப்பதாலும் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பணப்பட்டுவாடா செய்யவே சில வேட்பாளர்கள் ஏஜெண்டுகளை நியமித்துள்ளார்களாம். தினமும் 100 குடும்பத்திற்கு பணப்பட்டுவாடா செய்தால் ஏஜெண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை கமிஷனாக கொடுக்கப்படுகிறதாம். அதேநேரம், வாக்களர்களை சொல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்களா என ஒரு குழுவினர் தனியாக ஆய்வு செய்கின்றனராம்.
சில வேட்பாளர்கள் அல்லது கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை தரப்படுகிறதாம். சில வேட்பாளர்கள் அல்லது கட்சி சார்பில் ரூ.5000 வரை கொடுக்கப்படுகிறதாம். இதனால் ஆர்.கே.நகரிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை சம்பாதிக்கிறார்கள்.
நிலைமை இதேபோல சென்றால், ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications