பாஜக, அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகரில் கடும் அதிருப்தி- ராஜநாயகம் குழு சர்வே முடிவுகள்
மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மைய சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுகள் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையத்தின் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையத்தின் 27 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. 156 தெருக்களில் 3120 வாக்காளர்களை சந்தித்து இந்த கருத்து கணிப்பை நடத்தியது.

கடும் அதிருப்தியே பதில்
இதில் மத்திய பாஜக, தமிழக அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறிதத்தும் ஓகி புயலில் மத்திய- மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்திலுமே மத்திய- மாநில அரசுகள் மீது மிக மிக கடும் அதிருப்தியையே வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

நான்கில் 3 பேர் அதிருப்தி
ஒன்றரை ஆண்டுகால அதிமுக ஆட்சி படுமோசம் என்பது 73.3% பேர் கருத்து. சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை என 22.1% பேரும் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என 4% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்சகட்ட அதிருப்தி
மத்தியில் நடைபெறக் கூடிய பாஜக படுமோசம் என 85.6% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே இல்லை என 7.9% பேரும் சிறப்பான ஆட்சி என 6.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடும்கோபம்தான்...
மத்திய மாநில அரசுகள் ஓகி புயலைக் கையாண்ட விதம் ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் நிறைவைத் தர வில்லை. இந்த புயலை மத்திய- மாநில அரசுகள் கையாண்ட விதம் படுமோசம் என 93.5% பேர் கூறியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே செய்யவில்லை என 6.5% கூறியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டது என ஒருவர் கூட சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications