திரூவாரூர் மத்திய பல்கலைக்கழக மேல்கூரை இடிந்து விபத்து: 5 பேர் பலி, 18 பேர் காயம்
திருவாரூர்: திருவாரூரில் கட்டப்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகியுள்ளனர்.
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள நாககுடி என்ற கிராமத்தில் 100 ஏக்கரில் மத்திய பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அந்த பல்கலைக்கழகம் கடந்த 2014ம் ஆண்டே குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்தது.
கட்டிடப் பணிகள் முழுமையாக முடியாததால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெற்றார். இதையடுத்து பல்கலைக்கழகத்தை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை எழுந்தது.

இந்நிலையில் பல்கலைக்கழக கட்டிடம் தரமானதாக இல்லை என்று புகார் எழுந்தது. இந்த சூழலில் பல்கலைக்கழக கட்டிடத்தின் மேல்கூரை இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர், 18 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications