தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி சுற்றி பார்த்தார்.
இதன்பிறகு தமிழக ஆளுநர், ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை, அடையாறு ஐஎன்எஸ்-ல் சந்தித்து ஆலோசித்தார். பிறகு மோடி கூறியதாவது: நான் பார்வையிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் மிக அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. தமிழக மக்களின் இந்த துயர நேரத்தில், மத்திய அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்.

உடனடியாக, தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.940 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications