சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம்... ஐடி கடிதத்தால் எடப்பாடி அரசுக்கு புதிய தலைவலி
சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ, மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.
மணல் மாபியாவும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராகவும் இருந்த சேகர் ரெட்டி தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்தார். இவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு மிகவு்ம் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
அவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரு நாள்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் மொத்தம் ரூ.138 கோடி ரொக்கமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மூட்டை மூட்டையாக...
மேலும் வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

ரூ.2000 நோட்டுகள்
மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு பின்னர் புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை புழக்கத்தில் வருவதற்குள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டு கட்டுக்காக புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

முக்கிய டைரி சிக்கியது
மேலும் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையின் பேரில் மாநில அரசின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ரூ.300 கோடி லஞ்சம்
பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு சேகர் ரெட்டி லஞ்சம் வழங்கியதாக டைரியில் குறிப்பு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications