ஓட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ. 7 ஆயிரம் வரை வினியோகம்.. ஆர்.கே.நகரில் மீண்டும் பணப்பட்டுவாடா!
ஆர். கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ.7000 வரை பணம் கொடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பதைத் பார்த்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே மட்டும் உள்ளதால் அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டு தேர்தலை சந்திக்கிறது. சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

ஆர்.கே. நகரில் எப்படியும் வெற்றி வாகை சூட வேண்டும் என இரு அணியினரும் பம்பரமாக சுழன்று வருகின்றனர். திமுகவும் தனது பங்கிற்கு ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளது. பாஜக, சிபிஎம், தேமுதிகவை பொருத்த வரை கணிசமான வாக்குகளையாவது பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கிடையே ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் களத்தில் உள்ளார்.
இதற்கிடையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அரசியல் கட்சிகள் மீது சரமாரியாக புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்து வருகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மீது ஓ.பி.எஸ். அணியினரும், ஓ.பி.எஸ். அணி மீது தினகரன் ஆதரவாளர்களும் புகார் கொடுத்துள்ளனர்.
பணப்பட்டுவாடா செய்ததாக டி.டி.வி.தினகரன் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தி.மு.க. வினரும் சிக்கியுள்ளனர். பணப்பட்டுவாடா குறித்து ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் கூறினாலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகமும் ஒருபுறம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பிரிவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்சி ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் மற்றொரு கட்சி ஓட்டுக்கு ரூ.1000-ம் வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளதாக தகவல் பரவியது.
ஏற்கனவே ரூ.4 ஆயிரம் பெற்ற வாக்காளர்கள் இப்போது 2 கட்சிகள் கொடுத்த ரூ.3 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதேபோல் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications