டிரவுசர் கூடாது.. பேண்ட் போட்டுக்கிட்டா ஓ.கே.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை ஹைகோர்ட் நிபந்தனை!
சென்னை: தமிழகத்தில் பேண்ட் அணிந்தபடிதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்த வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 14 இடங்களில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிவகுப்பு பேரணி நடத்திக்கொள்ள உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. அதில் முக்கியமான நிபந்தனை, கால் சட்டை அணியாமல் பேண்ட் போட்டுதான் பேரணி நடத்த வேண்டும் என்பதாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளரான ஜோதீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி, அம்பேத்கரின் 126வது ஜெயந்தி மற்றும் விஜயதசமியை கொண்டாடும் வகையில் கோவை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அணிவகுப்பை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி வழங்காமல் அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே, பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு அண்மையில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உள்ளாட்சித் தேர்தல் நேரமாக இருப்பதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜயதசமி அன்றுதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. எனவே, அன்றைய தினம் பேரணி நடத்த அனுமதிக்காவிட்டாலும் வேறு தினங்களில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''மக்களின் மத உணர்வை பாதிக்காத வண்ணம் ஆர்எஸ்எஸ் சார்பில் நவம்பர் 6 அல்லது நவ. 13 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு பேரணியை நடத்திக் கொள்ளலாம். பேரணியில் செல்பவர்கள் அரைக்கால் சட்டை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை அணிந்துதான் செல்ல வேண்டும்.
மேலும் பேரணியின்போது கையில் லத்தி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. கூடாது. போலீஸார் விதிக்கும் நிபந் தனைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது, என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காக்கி வண்ண அரைக்கால் சட்டை அணிந்து அணி வகுப்பு நடத்துவதுதான் நீண்ட கால நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications