அண்ணாமலை பல்கலை.யில் ருவாண்டா மாணவியை பலாத்காரம் செய்த சக நாட்டு மாணவர்
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வரும் மாணவி ஒருவரை அவரது நாட்டைச் சேர்ந்த மாணவரே பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
ருவாண்டாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிக்கின்றனர். அனைவரும் விடுதியில் தங்கியுள்ளனர். சர்வதேச மாணவர்களுக்காகவே அங்கு தனியாக விடுதியும் உள்ளது. அதில்தான் இவர்கள் தங்கியுள்ளனர்.
அந்த விடுதியில் தங்கிப் படித்து வரும் ஒரு மாணவி, ரூரல் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பு படித்து வருகிறார். ருவாண்டாவைச் சேர்ந்த புரூஸ் என்ற மாணவர் முத்தையா நகரில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கிப் படித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
நேற்று தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து வந்துள்ளார் புரூஸ். அங்கு அவர் அத்துமீறி மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.
இதில் அந்த மாணவி காயமடைந்துள்ளார். சக நாட்டு மாணவரே செய்த இந்த அத்துமீறலால் அதிர்ச்சி அடைந்த அவர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீஸார் புரூஸைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications