7 பேர் விடுதலை: கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறு; தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு-'கூடங்குளம்' உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

இடிந்தகரை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையை அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பது தவறானது என்றும் தமிழக அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்து தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினருக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

Udayakumar and Kejriwal

இது குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாலர் சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுவிக்க முயற்சிப்பது தவறு என்கிற ரீதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இரத்தினச் சுருக்கமாக அவர் பேசியிருப்பதிலிருந்தே பிரச்சினையின் ஆழ அகலங்கள் தெரியாமல், முழு புரிதல் இல்லாமல் சொல்லப்பட்டக் கருத்து அது என்பது தெளிவாகிறது. ஈழப் பிரச்சினை பற்றி பிரசாந்த் பூஷனோடு ஒரு முறை இடிந்தகரையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அது பற்றி தனக்குப் பெரிதாக தெரியாது என்று உண்மையைச் சொல்லி அதிகம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதே பக்குவமும் முதிர்ச்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், யோகேந்திர யாதவுக்கும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

இந்தியாவின் அடுத்தத் தலைமுறை தலைவர்களான இவர்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைப்பது ஒரு மிக முக்கியமானக் கடமையாக இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதனைத் திறம்பட செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அபாண்டமாகக் குற்றஞ்சாட்டப்பட்டத் தோழர்களை விடுவிக்க முன்வரும் தமிழக அரசைப் பாராட்டுவோம்.

இவ்வாறு சுப. உதயகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

People's Movement Against Nuclear Energy convener S.P. Udayakumar has criticised former Delhi Chief Minister Arvind Kejriwal's statement against Tamil Nadu government's decision to release all seven convicts in Rajiv Gandhi assassination case.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+