அதிமுகவில் இணையப் போவதில்லை: தமாகாவின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் இணையப்போவதில்லை என்று தமாகாவின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதால் அக்கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி புது கட்சி துவங்கி இருப்பதால், தேமுதிக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் தமாகா மூத்த தலைவர்கள் சிலரும் கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், கட்சியில் இருந்து விலகவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமாகாவும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 26 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமாகா மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் அனைவரும் மீண்டும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் ஒருப்பகுதியாக இன்று அவர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், துணை தலைவர் ராகுல்காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர்கள் அதிகாரபூர்வமாக தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி என்பது தாய்வீடு போன்றது. வாசனைத் தவிர அனைவரும் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
இவர்களைப் போல் மற்றொரு மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக.வில் இணைய முடிவு செய்திருப்பதாக வெளியானது.
ஆனால் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். முதல்வரை சந்திக்க நேரம் மட்டுமே கேட்டததாகவும், அதிமுகவில் இணையப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications