இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சா? - எஸ்.வி.சேகர்
அதிமுவுக்கு பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்று எம்.பி.மைத்ரேயன் பேட்டியை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு பாஜகவின் வாக்கு வங்கி தேவையில்லை என்று மைத்ரேயன் எம்.பி. கூறியதை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், இணையாத மனங்கள் இருக்கும் போதே பேச்சு அதிகம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மதுசூதனனின் தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு மைத்ரேயன் எம்.பி. சென்றார்.
அப்போது மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக வெற்றி பெற எங்கள் வாக்கு வங்கியே போதுமானது. பாஜக ஒரு பொருட்டே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தித்தாளில் வந்த செய்தியை சுட்டிக் காட்டி எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆன்னா ஊன்னா டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே 👎👎😭 pic.twitter.com/DamldqgslB
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 3, 2017
எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறுகையில், ஆன்னா ஊன்னா டெல்லிக்கு காவடி தூக்குற அதிமுக ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க தேவையில்லை. இணையாத மனங்கள் இருக்கும் போதே இவ்வளவு பேச்சு அதிகம். ஜோதி பிரகாசமா எரியுது. சீக்கிரமே இந்த ஆட்சி கவிழ்ந்திடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பதிவில், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் கடந்த பின்னரும் மனங்கள் இணையவில்லை என்று கூறியிருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.