பேரனுக்கு பிறந்தநாள் கொண்டாடும் எஸ்.வி.சேகர்.. சென்னையில் பத்திரிக்கை கொடுக்க பயணம்!
பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
Recommended Video

சென்னை: பேரனுக்கு நாளை பிறந்த நாள் கொண்டாடுவதற்காக போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய அளவில் பிரச்சனை ஆனது. இந்த பிரச்சனையில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை பேஸ்புக்கில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.

ஜாமீன் நிராகரிப்பு
ஆனால் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை.அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.

பிறந்த நாள் விழா
இந்த நிலையில் சென்னையில் எஸ்.வி.சேகரின் பேரனுக்கு நாளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அவரது வீட்டில் பெரிய அளவில் தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.வி. சேகர் நேற்றில் இருந்தே வீட்டில்தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரை அந்த பகுதியில் பார்த்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கை கொடுக்க
இதற்காக முக்கியமான நபர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க எஸ்.வி.சேகர் திட்டமிட்டுள்ளார். சில முக்கிய பாஜக பிரபலங்கள், சில ஆளும் கட்சி பிரபலங்கள், சினிமா நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இதற்காக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். நாளை நிகழ்வில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இப்போது எங்கே
இவர் நேற்றில் இருந்தே இதற்காக, சென்னையில் பத்திரிக்கை கொடுத்து வருகிறார். இதற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்ட போதுதான், அந்த புகைப்படம் வெளியானது. அவர் போலீஸ் பாதுகாப்புடன்தான் பத்திரிக்கை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications