மதுரை திருமங்கலத்தில் கார் பாலத்தில் கவிழ்ந்து விபத்து... தெலுங்கானா எஸ்ஐ உள்பட 4 பேர் பலி

மதுரை அருகே திருமங்கலத்தில் சபரிமலை சென்றுவிட்டு தெலுங்கானா திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் கார் பாலத்தில் மோதி 4 பேர் பலியாகிவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் சபரிமலை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த தெலுங்கானா பக்தர்களின் கார் பாலத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ரகு மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றிருந்தனர். யாத்திரை முடித்துக் கொண்டு மதுரை திருமங்கலம் வழியாக தெலுங்கானாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

Sabaraimala yadras met with an accident in Madurai

அப்போது மறவன்குளம் அருகே வேகமாக வந்த இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி சுரங்கப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் உதவி ஆய்வாளர் ரகு உள்பட 4 பேர் பலியாகிவிட்டனர். மேலும் ஒரு படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலியான 4 பேரின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+