காலில் கட்டுப்போட்ட என்னை கட்சியை உடைப்பதாக கூறிவிட்டார்களே.. சைதை துரைசாமி வேதனை
வீட்டு மாடி படிக்கட்டில், தவறி விழுந்ததால் கால் ஜவ்வு கிழிந்து விட்டது. எனவே காலில், கட்டு போட்டு வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன் என சைதை துரைசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுக கட்சியை உடைக்க சதி செய்வதாக வதந்தி பரப்பப்படுவதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவுக்கு தலைமை ஏற்குமாறு, சசிகலாவை, நேரில் சந்தித்து வலியுறுத்திய முக்கிய நிர்வாகிகளில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர்.
ஆனால், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், சைதை துரைசாமி யாருடைய கண்களுக்குமே தென்படவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

பரவிய தகவல்
இந்நிலையில், ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபாவுடன் சேர்ந்து அதிமுகவை உடைக்க சைதை துரைசாமி முயற்சி செய்கிறார் என்று தகவல்கள் பரவின. சைதை துரைசாமி மட்டுமல்லாது அதிமுகவின் வேறு சிலரும் தீபாவுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக தகவல் பரவி வந்தது.

கால் ஜவ்வு கிழிந்துவிட்டது
இதுகுறித்து, சைதை துரைசாமி தெரிவிக்கையில், டிசம்பர் 31ல், வீட்டு மாடி படிக்கட்டில், தவறி விழுந்ததால், டாக்டர்களை அழைத்து பரிசோதித்து பார்த்தேன். கால் ஜவ்வு கிழிந்து விட்டதாக கூறினர். எனவே காலில், கட்டு போட்டு வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன்.

வதந்தி
பாதிக்கப்பட்ட கால் சரியாக இன்னும் சில பல தினங்களாகும். எனவேதான் வெளியே வர முடியாமல் உள்ளேன். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி என்னை பற்றி வரும் தகவல்கள் வதந்திதான். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலில் தீபா
தீபா அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரது இல்லத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். எனவே ஜெயலலிதா விசுவாசிகள் அவர் பின்னால் அணிவகுக்க தயாராவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துவரும் நிலையில், அந்த லிஸ்டில் தான் இல்லை என சைதை துரைசாமி கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications