வீட்டு வேலைக்கு இளம்பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் - சேலத்தில் விபச்சார கும்பல் கைது
சேலம்: சேலத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு சேலம் போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் மிகவும் பதட்டத்துடன் பேசினார். "சார் நான் ஊட்டியில் இருந்து பேசுகிறேன், என் பெயர் ஜெனிட்டா, நான் ஊட்டியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
சேலத்தில் ஒருவர் இளம்பெண்ணை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று அவளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். எப்படியாவது அந்த பெண்ணை காப்பாற்றுங்கள் சார்" என்று கூறி சம்பந்தப்பட்டவரின் முகவரியையும் தெரிவித்தார்.
இதனால் பதறிப்போன போலீசார் உடனே நடவடிக்கையில் இறங்கினார்கள். ஜெனிட்டா சொன்ன முகவரியை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது டவுன் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் சேலம் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த சலீம் என்கிற ஜனவுல்லா என்பவர் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சலீம், விடுதி மேலாளர் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற இளம் பெண்ணையும் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கவுசல்யாவை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து அவளை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தன்னைப்போல் தனது தோழியும் விபசாரத்தில் தள்ளப்பட்டுள்ளாள் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறினாள்.
"நானும் பொன்னம்மா பேட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவளும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். இருவரும் இணைபிரியாத தோழியாக இருந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னைப்போலவே அவளை தாதகாப்பட்டி அம்பாள்ஏரி 2 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று தப்பான வழியில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் தலைமையில் போலீசார் பாலசுப்பிரமணி வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து புவனேஸ்வரியை மீட்டனர். அவளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பாலசுப்பிரமணி மற்றும் இந்த தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி செல்வியையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட கவுசல்யா, புவனேஸ்வரி ஆகிய 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications