பெற்ற மகளின் தோழியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரன்!
ஆத்தூர்: சேலத்தில் மகளுடன் படித்து வரும் தோழியை ஒருவர் மது அருந்த வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீரபத்திரன் . இவரது மகளும், சங்கர் மகளும் தோழிகள். இவர்கள் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள்.
நேற்று மாலை சங்கர் மகள் தனது தோழி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்கள் வீடு பூட்டப்பட்ட நிலையில் வீரபத்திரனும், அவரது மகளும் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர் மகள் ஏன் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே இருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு வீரபத்திரன், மனைவி வீட்டை பூட்டி விட்டு ஆத்தூர் சென்று விட்டார். சாவி அவரிடம் தான் இருக்கிறது. அவர் வந்தால் தான் வீடு திறக்க முடியும் என்றார். மேலும், வீரபத்திரன் சங்கர் மகளை வண்டியில் அழைத்துக் கொண்டு சாவி வாங்க சென்றுள்ளார்.
முல்லை வாடி பகுதியில் மாலை 6 மணியளவில் வீரபத்திரன் மது, புரோட்டா, குளிர்பானம் ஆகியவற்றை வாங்கினார். தொடர்ந்து அவர் மாணவியை முல்லைவாடி பகுதியில் உள்ள பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.
ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற வீரபத்திரன் மாணவியை மது குடிக்க சொல்லி செருப்பால் பலமாக முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் மாணவியின் ஆடைகளை கழற்ற சொல்லி தாக்கியுள்ளார். பின்னர் வீரபத்திரன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதோடு இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய காமுகன் வீரபத்திரன், இனி இதே போல் அடிக்கடி வரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். உடல் முழுவதும் காயத்துடன் திரும்பி வந்த மாணவியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வீரபத்ரனைக் கைது செய்து, விசாரணைக்குப்பின்பு மத்திய சிறையில் அடைத்தனர். அம்மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications