சேலத்தில் பண மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளர் கைது - வீடியோ
சேலத்தில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் சுகாரத்துறை ஊழியரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த சுகாதாரத்துரை ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் சுகாதாரத்துறை ஊழியராக பணிபுரிந்தவர் பூங்கொடி. அவரிடம் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணிபுரியும் வெங்கடாச்சலமும் அவரது மனைவி யசோதாவும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பூங்கொடியிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு நிலம் வாங்கிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து பூங்கொடி கேட்டும் அவர்கள் சரியான பதில் தரவில்லை. அதையடுத்து, பூங்கொடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதனையடுத்து வெங்கடாசலம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது மனைவி யசோதா தலைமறைவகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications