கருணை கொலை செய்யும் முன்பாக தானாக உயிரை துறந்த கோவில் யானை ராஜேஸ்வரி! பக்தர்கள் கண்ணீர்
கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்த சேலம் கோவில் யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது.
Recommended Video

சேலம்: கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதித்த சேலம் கோவில் யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது.
சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான யானை ராஜேஸ்வரி இடது கால் ஊனம் காரணமாக நிற்க முடியாமல் வலதுகால் உதவியுடன் நின்று வந்தது. நாளடைவில் வலது காலிலும் வாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சரிவர நிற்க முடியாத காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யானை கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

யானையால் எழும்ப முடியவில்லை
இந்த நிலையில் கடந்த மாதம் 5ஆம் தேதி யானை ராஜேஸ்வரி நிற்க முடியாமல் படுத்தது. அதன் பின்னர் யானையால் எழும்ப முடியவில்லை.

படுத்த படுக்கையான யானை
படுத்த படுக்கையான பின்னர் டாக்டர்கள் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். யானை ராஜேஸ்வரிக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய வகையில் தினமும் வெள்ளரி, திராட்சை, குளுக்கோஸ், தர்பூசணி, அன்னாசி பழங்கள், செவ்வாழை ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டு வந்தது.

ஹைகோர்ட்டில் மனு
தொடர்ந்து படுத்த நிலையில் இருப்பதால் யானையின் வலது புற பகுதியில் புண் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து யானையை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கருணை கொலைக்கு அனுமதி
இதுதொடர்பாக மருத்துவர்கள் குழு மற்றும் கோவில் நிர்வாகத்திடம் அறிக்கை பெற்ற உயர்நீதிமன்றம் யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய அனுமதி அளித்தது.

யானை ராஜேஸ்வரி மரணம்
இந்நிலையில் உடல்நிலையில் மோசமடைந்ததால் யானை உயிரிழந்தது. யானை ராஜேஸ்வரி மரணமடைந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications