சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை ஜெயலலிதா பரிசாக அளித்ததாம்!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானையை பரிசாக ஜெயலலிதா அளித்தார்.
Recommended Video

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மசினியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிசளித்தாராம்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற யானை உள்ளது. 10 வயது நிரம்பிய இந்த யானையை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாகன் கஜேந்திரன் (50) பராமரித்து வந்தார். மசினியை தினமும் மாகாளிகுடியில் குளிக்க வைத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
வெள்ளிக்கிழமை என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் நேற்று கோயிலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். கஜேந்திரனுக்கு உதவியாக அவரது மகன் அச்சுதன் (22) உதவி பாகனாக இருந்து வருகிறார். கோயிலின் வெளியே திருமணங்கள் நடந்தன. மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தனர்.

தும்பிக்கையால் தூக்கி வீச்சு
யானை மசினி ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது யானையின் நடவடிக்கை சற்று மாறியது. இதனால் கஜேந்திரன் யானையை அங்குசத்தால் தட்டிக் கொடுத்தார். காலை 10.30 மணி அளவில் திடீரென யானை கோபம் கொண்டது. உடனே அருகில் இருந்த பாகனை தும்பிக்கையால் தூக்கி போட்டது.

பாகனை கொன்ற யானை
இதை கண்ட பக்தர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். அப்போது பாகன் கஜேந்திரனை காலால் தொடர்ந்து மிதித்தது. இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து கோயில் பூட்டப்பட்டது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் பாகன்கள், உதவி பாகன்கள் சமயபுரம் கோயிலுக்கு வந்தனர்.

யானை அமைதியானது
அங்கு வந்து யானைக்கு தர்ப்பூசணி பழங்கள், கரும்புகளை தூக்கி வீசினர். அதை யானை சாப்பிடவில்லை. இதையடுத்து பாகன்கள் யானை பாசையில் பேசி அதை அமைதிப்படுத்தினர். பின்னர் அதன் கால்களை சங்கிலியால் கட்டிப் போட்டனர். அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் யானை அமைதியானது.

ஜெ. கொடுத்த யானை மசினி
தன் கண் முன்னே தந்தையை யானை மிதித்து கொன்றதால் அவரது மகன் கதறி அழுதார். சுமார் 6 மணி நேரம் கழித்து யானையை வெளியே அழைத்து வந்து வழக்கமான இடத்தில் கட்டி வைத்தனர். இந்த யானையை சமயபுரம் கோயிலுக்கு ஜெயலலிதா பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications