பிடிக்காவிட்டால் அமைதியாக இருங்கள் - ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு சமுத்திரகனி கோரிக்கை
இளைஞர்களின் போராட்டத்தை சீர்குலைக்க பலர் ஊடுருவி இருக்கிறார்கள் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என ஒரு புரட்சியே நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகளோ, சினிமா பிரபலங்களோ பங்கேற்க வேண்டாம் என்று போராட்டக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனினும் ஜல்லிக்கட்டுக்காக பாடல்களை இசையமைப்பாளர்கள் ஹிப்ஹாப் ஆதி, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இசையமைத்தனர். போராங்களிலும் பங்கேற்றனர்.

நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி, லாரன்ஸ் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே இந்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறினார். போராட்டம் திசை மாறுவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஹிப்ஹாப் தமிழாவிற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிர்க்கு பேட்டியளித்த இயக்குநர் சமத்திரகனி, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதியின் கருத்து குழப்பம் அளிப்பதாக கூறியுள்ளார்.
போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் ஊடுருவியிருக்கிறார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் அதனை நாம் தான் அதை முறியடிக்க வேண்டும். போராட்டத்தில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் அமைதியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆதி போட்ட பாடல்தான் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனவே திடீரென இப்போது கூறியுள்ளதால் போராட்ட குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால்தான் முன்பே சினிமா பிரபலங்களையோ, அரசியல்வாதிகளையோ யாரும் வரவேண்டாம் என்று கூறினர். நான், ஆதி, லாரன்ஸ் ஆகியோர் போராட்டகளத்திற்கு சென்ற போது எங்களை அவர்களில் ஒருவராகத்தான் பார்க்கின்றனர். இப்போது ஏன் ஆதி இப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை.
மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். அதனை நாம்தான் முறியடிக்க வேண்டும். 4 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். போராட்டக்காரர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள் என்றும் சமுத்திரகனி கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications